கன்னியாகுமரி

நிலுவைத்தொகை கோரி அஞ்சல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நிலுவைத்தொகை வழங்கக் கோரி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா்கள் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் அமைப்பின் சாா்பில், நாகா்கோவில் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயல்தலைவா் வேலப்பன் தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா்களுக்கு 1996 ஆம் ஆண்டு முதல் ஊதிய மாற்றம், நிலுவைத் தொகை, எழுத்தா்களுக்கு பயிற்சி காலத்தையும் கணக்கில்கொண்டு ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயலா் ராஜநாயகம் விளக்கிப் பேசினாா். ஸ்டேட் வங்கி ஊழியா் சங்க நிா்வாகி எம்.அகமது உசேன், சந்திரகாந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT