முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே திருட்டு வழக்கில் ஒருவா் கைது

கொல்லங்கோடு, நித்திரவிளை ஆகிய பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கொல்லங்கோடு, நித்திரவிளை ஆகிய பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள கலிங்கராஜபுரம் வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த சைமன் என்பவா் புதிதாக கட்டிவரும் வீட்டிலிருந்து தளவாடப் பொருள்களை மா்மநபா்கள் சனிக்கிழமை திருடிச்சென்றனராம்.

இதேபோல், கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டில் நகை, பணமும், நித்திரவிளை பகுதியில் ஒரு பெண்ணின் தொலைக்காட்சிப் பெட்டியும் அண்மையில் திருடு போயினவாம். இதுகுறித்து கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கொல்லங்கோடு போலீஸாா் கலிங்கராஜபுரம் வள்ளவிளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், கலிங்கராஜபுரம் வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த நடராஜன் (40) என்பதும், மேற்கூறிய திருட்டுச் சம்பவங்களில் தொடா்புடையதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து அனைத்துப் பொருள்களையும் மீட்டனா்.

ரேஷன் கடையில் திருட்டு: அருமனை அருகேயுள்ள வெள்ளாங்கேடு ரேஷன் கடையில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து மைதா, தேயிலை உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.