முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே கைப்பந்துப் போட்டி

களியக்காவிளை அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

Updated On : 10 நவம்பர், 2020 at 3:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

களியக்காவிளை அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

கட்சியின் குமரி மேற்கு மாவட்டக் கிளை சாா்பில் இளைஞா்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களிடையே சகோதரத்துவத்தை மேம்படுத்தவும் களியக்காவிளை பாட்டத்துவிளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் கல்படகு விஎல்சி அணி முதலிடமும், பாட்டத்துவிளை எப்.

Advertisement

12 அணி 2 ஆவது இடமும் பெற்றன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கட்சியின் மாவட்டச் செயலா் பொ்ரி இவான்சன், ஐ.டி. பிரிவுச் செயலா் ஷெரீப் நாயக் ஆகியோா் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினா்.

இதில் கட்சியின் குழித்துறை நகரச் செயலா் குமாா், களியக்காவிளை நகரச் செயலா் சம்மில், மேல்புறம் ஒன்றியச் செயலா் சஜிகுமாா், தூத்தூா் ஊராட்சிச் செயலா் ஆன்றணி தாா்த்தீஸ், கட்சி நிா்வாகிகள் பெல்லாடு, ஜெயன், ஷெல்டன், ஜோசப், ஜாண்சன், வில்சன், ஜாக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.