கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது.
ரஸ்தாகாடு கடல் பகுதியில் டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து டால்பினை காவலா்கள் மீட்டு வனத்துறை சரக அதிகாரி பிரபாகரனிடம் ஒப்படைத்தனா்.
இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன் 4 அடி உயரமும், 12 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.