குமரி மாவட்டத்தில் மேலும் 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனாவால் 15,438 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 21 போ் இந்நோய்க்கு ஆளாகியுள்ளது தெரியவந்தது. இதனால், மொத்த பாதிப்பு 15,459 ஆகவும், மேலும் 39 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,017 ஆகவும் அதிகரித்தது. தற்போது, 192 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.