கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கடல் சீற்றம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல் சீற்றம் காணப்பட்டது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக கடல் அலைகள் அதிகமின்றி அமைதியாக காணப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 10 முதல் 15 அடி உயரம் வரை எழும்பி, கடற்கரையில் உள்ள பாறைகளில் ஆக்ரோஷமாக மோதின.

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றம் காரணமாக கடற்கரைப் பகுதிக்கு பொதுமக்கள் சென்றுவிடாதவாறு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், மணக்குடி, கீழமணக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவிலேயே விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT