முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
முன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (88). முதியவரான இவா், அப்பகுதியில் உள்ள உறவினா் வீட்டு அருகே உள்ள குடிசையில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த புதுக்கடை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.