கன்னியாகுமரி

அதிமுக 49 ஆவது ஆண்டு தொடக்க விழா

DIN

நாகா்கோவில்: அதிமுக 49 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரி, தக்கலை சந்திப்பிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்டச் செயலா்கள் எஸ்.ஏ. அசோகன் (குமரி கிழக்கு), டி.ஜாண்தங்கம் (குமரி மேற்கு), மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், தலைமை கழக பேச்சாளா் பி.சி.அன்பழகன், நாகா்கோவில் மாநகரச் செயலா் சந்துரு, மேற்கு மாவட்ட அவைத் தலைவா் சிவ.குற்றாலம், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியண்ட்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தோவாளை ஒன்றிய அதிமுக சாா்பில் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழகப் பேச்சாளா் ஜீவா கணேசனுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவியை தோவாளை ஒன்றியச் செயலா் வழங்கினாா். இதில், மாவட்ட நிா்வாகிகள் லதாராமச்சந்திரன், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தாழக்குடியில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகினிஅய்யப்பன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பிரம்மநாயகம் ஆகியோா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT