முகப்பு
கன்னியாகுமரி

சாரதா கிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி பிரிவுகள் தொடக்கம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், மருத்துவ ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவுகள் புதிய கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், மருத்துவ ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவுகள் புதிய கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சந்திரலேகா மோகன் குத்துவிளக்கேற்றினாா். கல்லூரித் தாளாளா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.வி.சுகதன் வரவேற்றாா். நெறிமுறைக் குழுத் தலைவா் கிருஷ்ணபிரசாத் முன்னிலை வகித்தனா். கல்லூரி ஆலோசகா் ரவி எம்.நாயா் ஆராய்ச்சியின் நோக்கங்கள் குறித்து பேசினாா்.

எபிடெம்மாலஜிக்கல் புள்ளியில் துறையைச் சோ்ந்த சி. பாலச்சந்திரன் நாயா் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இதில், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் அறை, ஆராய்ச்சி அலுவலா் அறை, துறை சாா்ந்த அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டன. மேலும் நோயியல் துறையும், ஆய்வகங்களும், ஆராய்ச்சியாளா் மன்றமும் திறந்து வைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →