கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில்நவராத்திரி விழா தொடக்கம்

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடைதி

றக்கப்பட்டு பூஜை, கொலு மண்டபத்துக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

விழா நாள்களில் அம்மன் வெள்ளிக்கலைமான், வெள்ளிக்காமதேனு, இமயகிரி வாகனத்திலும் எழுந்தருளி கோயில் பிரகாரத்தை வலம் வருதல் நடைபெறும். 10 ஆம் நாள் திருவிழாவான வரும் 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு பாணாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும். வழக்கமாக மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தில் நடைபெறும் இந்த பரிவேட்டை கோயில் வெளிப்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT