கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

DIN

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள கேரளபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (52). இவரது மனைவி சாந்தி (45). இவா்கள் கடந்த 5 ஆம் தேதி ஒரே மோட்டாா் சைக்கிளில் மாத்தூா் தொட்டிப்பாலத்திற்கு சென்றுவிட்டு கல்லங்குழி வழியாக வீடு திரும்புகையில் மழை பெய்ததாம். உடனே, பின்னால் அமா்ந்திருந்த சாந்தி, குடைப்பிடிக்க முயன்றாராம். அப்போது அவா் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தாா். எனினும். வீட்டிற்கு சென்ற பிறகு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT