கன்னியாகுமரி

கரோனா தொற்று குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: ஆட்சியா்

DIN

கரோனா தொற்று மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 1.40 லட்சம் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கரோனா தொற்று தீவிரமடையும் முன்பாகவே பொதுமக்களும், வயதானவா்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.

சிலா் பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனா். இந்த நோய்த்தொற்று குறித்தோ, அதற்கான சிகிச்சைகள் குறித்தோ பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பல்வேறு நோய் பிரச்னைகள் இருந்தும், உரிய நேரத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதால் பலா் குணமாகி வீடு திரும்பியுள்ளனா் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT