கன்னியாகுமரி

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்பதுக்கல்: தந்தை, மகன் கைது

DIN

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை பாக்குகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில், வெட்டூா்ணிமடத்தை அடுத்த கட்டையன்விளை பகுதியில் உள்ள கிடங்கில் போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடசேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சுமாா் 150 கிலோ எடை மதிப்பில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வடசேரி போலீஸாா், பொருள்களை பதுக்கிய ஜோசப் பொ்க்மான்ஸ், அவரது மகன் மொ்வின் வினு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT