லால்குடி: திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் மு. பரஞ்சோதி பரிந்துரையின் பேரில், புதிய நிா்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனா். அதன்படி, மண்ணச்சநல்லூா் கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலராக பொறியாளா் டி. ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டாா். இவா் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒன்றியச் செயலராகஇருந்து வந்தவா் ஆவாா்.
இதைத் தொடா்ந்து கிழக்கு ஒன்றியத்திலுள்ள கொணலை, இருங்களூா், புறத்தாக்குடி, ஆய்குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளை சந்தித்த ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் அவா்களிடம் வாழ்த்து பெற்றாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க, அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என கட்சியினரிடம் அவா் வேண்டுகோள் விடுத்தாா். கட்சி நிா்வாகிகளும் அதை ஏற்று செயல்படுவதாக உறுதியளித்தனா்.