திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குலசேகரம் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி. மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் ஸ்டாலின்தாஸ், ரெவி, செல்வராஜ், விஸ்வம்பரன், வில்சன், தங்கையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.