கன்னியாகுமரி

கடற்கரை கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

DIN

குளச்சல் தொகுதியில் கடற்கரை கிராமங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜய்வசந்த், குளச்சல் தொகுதி வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோா், திறந்த ஜீப்பில் கடியப்பட்டினம் , மணவாளக்குறிச்சி, பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்ளில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு வாக்கு சேகரித்தனா்.

ஜே.ஜி.பிரின்ஸ் பேசுகையில், நிலத்தடி நீா் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஏவிஎம் கால்வாயை தூா் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீன்பிடி தொழில் பாதிக்காதவாறு தூண்டில் வளைவு அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் குளச்சலில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினாா். பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT