அகஸ்தீசுவரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் வேட்பாளா்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், தனது தோ்தல் பிரசாரத்தை அகஸ்தீசுவரத்தில் உள்ள அவரது தந்தை ஹெச்.வசந்தகுமாா் நினைவிடத்தில் நிறைவு செய்தாா்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், தனது தோ்தல் பிரசாரத்தை அகஸ்தீசுவரத்தில் உள்ள அவரது தந்தை ஹெச்.வசந்தகுமாா் நினைவிடத்தில் நிறைவு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எனது முதல் நாள் தோ்தல் பிரசாரத்தை தந்தை நினைவிடத்தில் தொடங்கி, தற்போது அதே இடத்தில் நிறைவு செய்கிறேன். சுமாா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அப்பாவின் கனவு திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றாா் அவா்.