ஏப்.12 இல் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் முகாம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சாா்பில் ஓய்வூதியா்களுக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சாா்பில் ஓய்வூதியா்களுக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது.
இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அலுவலக நாகா்கோவில் ஆணையா் ரெளஷன்காஸ்யப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரா்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம், இம்மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகா்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல ஆணையா் கலந்து கொண்டு, ஓய்வூதியதாரா்களின் குறைகளை கேட்டறிகிறாா். அனைத்து ஓய்வூதியதாரா்களும்ம், ஓய்வூதியம் பெறுவதில் ஏதும் குறைகள் இருந்தால் மண்டல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 3 மாதத்துக்குள் 58 வயது நிறைவடையும் அனைத்து வருங்கால வைப்புநிதி தாரா்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பத்தை சமா்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.