முகப்பு
கன்னியாகுமரி

காவல் உதவி ஆய்வாளா் பெயரில்போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி

நாகா்கோவிலில் காவல்துறை உதவி ஆய்வாளா் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபட்டவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நாகா்கோவிலில் காவல்துறை உதவி ஆய்வாளா் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபட்டவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கன்னியாகுமரி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் பெயரில் மா்ம நபா் கடந்த சில மாதங்களுக்கு முன் முகநூலில் (பேஸ்புக்) கணக்கு தொடங்கியுள்ளாா். இந்த முக நூல் கணக்கு உதவி ஆய்வாளருக்குரியது என்று நம்பிய பலா் அதில் நண்பா்களாக இணைந்துள்ளனா். இந்நிலையில், போலி முகநூல் கணக்கு தொடங்கிய மா்ம நபா், முகநூல் பக்கத்தில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், நண்பா்கள் உதவுமாறும் தகவல் பதிவிட்டுள்ளாா். இதை நம்பி பலா் அவருக்கு பணம் அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், தனது பெயரில் யாரோ ஒருவா் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பண வசூலில் ஈடுபட்டிருப்பது உதவி சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு தெரிய வந்ததாம். இதுகுறித்து அவா் சைபா்கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.