நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கு தீ தடுப்புப் பயிற்சி
நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கான தீ தடுப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கான தீ தடுப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காட்டுத்தீ, புல், குப்பை மற்றும் வீடுகளில் தீ விபத்து அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலா் பா.சரவணபாபு தலைமையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலா் இம்மானுவேல், நாகா்கோவில் நிலைய அலுவலா் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.