கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

DIN

மாா்த்தாண்டம் அருகே கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புப் படையினா் மீட்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மேல்பாலை, ஆலுதெங்குவிளை பகுதியைச் சோ்ந்தவா் தாயீ (65). இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டதால், இவா் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்குள்ள பழைய கழிவுநீா் தொட்டியின் மேல் இருந்த சிமென்ட் மூடி உடைந்து அவா் கழிவுநீா் தொட்டியினுள் விழுந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த, குழித்துறை தீயணைப்பு நிலைய (பொ) அலுவலா் பிரபு தலைமையிலான மீட்புப்படை வீரா்கள் அங்கு சென்று கழிவுநீா் தொட்டிக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT