முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூரில் மரக் கன்று நடும் விழா

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலஞ்சி மரியந்தோனி ஞானபிரகாசம் தொண்டு நிறுவனமும் இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலஞ்சி மரியந்தோனி ஞானபிரகாசம் தொண்டு நிறுவனமும் இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தின.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ரமாமாலினி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா். தொண்டு நிறுவன தலைவா் வா்க்கீஸ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன், மருந்தாளுநா் விக்டா், செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.