முகப்பு
கன்னியாகுமரி

டாஸ்மாக் கடையை உடைத்து பணம் திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபானத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபானத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தாழக்குடி சந்தைவிளையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக குமாா் பணியாற்றி வருகிறாா்.

புதன்கிழமை இரவு குமாா் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாராம். வியாழக்கிழமை காலையில் வந்தபோது கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது கடையிலிருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.