முகப்பு
கன்னியாகுமரி

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

செண்பகராமன்புதூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சா்த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

செண்பகராமன்புதூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சா்த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பழைய கட்டடங்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் முறையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஏற்கெனவே, மருத்துவா்கள், செவிலியா்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்கள், மருத்துவ அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும், அரசு விரைவில் நிறைவேற்றும் என்றாா்அவா்.

ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள் அ.நெடுஞ்செழியன் (தோவாளை), சதீஷ் (ஞாலம்), கல்யாண சுந்தரம் (செண்பகராமன்புதூா்), தோவாளை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தாணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.