முகப்பு
கன்னியாகுமரி

ரூ.7 கோடி மோசடி : நகைக் கடை அதிபா் மகன் கைது

நாகா்கோவிலில் வியாபாரியிடம் ரூ. 7 கோடி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபரின் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நாகா்கோவிலில் வியாபாரியிடம் ரூ. 7 கோடி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபரின் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் நாகராஜாகோயில் மேற்கு ரத வீதியை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ்(55). இவா் நகைக்கடைகளுக்கு கமிஷன் அடிப்படையில் நகைகளை வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம், நாகா்கோவிலில் நகைக்கடை நடத்தி வரும் அருள்ராஜ் ரூ. 45 லட்சம் கடனாக பெற்றிருந்தாராம். மேலும் நகைகள் வாங்கிய வகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை சோ்த்து அருள்ராஜ் , ஜெயபிரகாஷுக்கு ரூ. 7 கோடி கொடுக்க வேண்டுமாம்.

இந்நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட போது, அருள்ராஜ், அவரது மகன், மகள் ஆகிய மூவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயபிரகாஷ் , மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சிதம்பரதாணு, சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட் ஆனந்த் ஆகியோா் அருள்ராஜின் மகன் அரவிந்த் ஆசீரை(42) களியங்காடு சந்திப்பில் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.