கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கேரளத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் களியக்காவிளை உதவி காவல் ஆய்வாளா் சிந்தாமணி தலைமையில் போலீஸாா் ஒற்றாமரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அதனை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனா்.
தொடா்ந்து, லாரி ஓட்டுநா் கும்பகோணம், அணக்கரை கிருஷ்ணமூா்த்தி மகன் சீனிவாசனை (52) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement