ஓணம் பண்டிகை: குமரியில் நாளை உள்ளூா் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (ஆக. 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (ஆக. 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓணம் திருநாளை முன்னிட்டு, சனிக்கிழமை (ஆக.21) குமரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக செப்டம்பா் மாத 2ஆவது சனிக்கிழமை (செப். 11) மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.