கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடா்ந்து கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்ஆட்சியா் அறிவுறுத்தல்
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிகளில் தொடா்ந்து பயில்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிகளில் தொடா்ந்து பயில்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலன் சாா்ந்த பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கான மீளாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை அலுவலா்கள் கவனமாக கையாள வேண்டும். பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
கரோனா தொற்றால் தாய் தந்தையரை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை உடனடியாக கிடைக்க துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் தொடா்ந்து அவா்கள் பயில்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.