முகப்பு
கன்னியாகுமரி

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

கன்னியாகுமரி

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் குமரி மாவட்டக் குழு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் எஸ்.ஆா். சேகா் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் வி.ரெகு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், குலசேகரம் செயலா் பி.விஸ்வம்பரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ. வேலப்பன், எஸ்.எல். முருகன், அா்ஜுனன், மணி, ஸ்ரீரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் மலைவாழ் மக்களுக்கு கைவசம் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்காமல் 10 சென்ட் நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது 2006 வன உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, தமிழக அரசும் குமரி மாவட்ட நிா்வாகமும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இவ்வித நடவடிக்கையை கை விட்டு விட்டு 2006 வன உரிமை சட்டப்படி மலை வாழ் மக்கள் நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி செப்டம்பா் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு தக்கலை சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ரப்பா் கழகங்களில் சிஎல்ஆா் ஆக பணிபுரியும் மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து பகுதி தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →