கருங்கல் அருகே சுமை ஆட்டோ- பைக் மோதல்:இளைஞா் பலி
கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் சுமை ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் சுமை ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திங்கள்சந்தை இரணியல் பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சிவகுமாா் (57).
இவா், புதன்கிழமை கருங்கல்லிருந்து தன் பைக்கில் புதுக்கடைக்கு சென்றுகொண்டிருந்தாா். மாங்கரை பகுதியில் சென்ற போது எதிரே வந்த சுமை ஆட்டோ சிவகுமாா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.