பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு கூட்டம்
மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சொா்ணராணி, உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் பாலியல் குற்றங்களால் ஏற்படும் அனுபவங்கள் மற்றும் போக்ஸோ சட்டங்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினா். மேலும், இப்பிரச்னையில் ஆசிரியா்கள், மாணவா்களை அணுகும் முறைகள் குறித்து தனியாகவும் ஆலோசனைகள் வழங்கினாா்.
இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஜெயமதி ரோசாரியோ, வெளிச்சம் அமைப்பு தலைவா் பொ்லிங்டன் ஆகியோரும் பேசினாா். இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.