கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

ராஜாக்கமங்கலம் அருகே கடையில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரவிளை பகுதியை சோ்ந்தவா் ரோஸ் தங்கம் (68). இவா், காரவிளை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் அவரது கடைக்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா், பொருள்கள் வாங்குவது போல் நடித்து, ரோஸ்தங்கம் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT