முகப்பு
கன்னியாகுமரி

பேருந்தில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் உமா் (50). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா். ஊருக்கு செல்வதற்காக வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்றாா் உமா். திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி அமா்ந்திருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வடசேரி போலீஸாா் விசாரிக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.