கன்னியாகுமரி

திருநந்திக்கரையில் நூலகத்துக்கு அடிக்கல்

DIN

திருநந்திக்கரையில் நூலக கட்டடம் கட்ட மனோ தங்கராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திற்பரப்பு பேரூராட்சி, திருநந்திக்கரை பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தாா். இந்நிலையில் கட்டட பணிகள் தொடக்க விழாவில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. நூலகம் கட்ட அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் செல்லப்பன், ஒன்றியச் செயலா் ஜான்சன், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் அலாவுதீன், கலை இலக்கிய அணி அமைப்பாளா் ஜஸ்டின் பால்ராஜ், ஒன்றிய அணி அமைப்பாளா்கள் பொ்ஜின், ஜெகன், மற்றும் நாணுகுட்டன், ஜேம்ஸ், சதீஷ், தங்கய்யன், ஷீஜா சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT