கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் விழிப்புணா்வுப் பேரணி

DIN

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இப் பள்ளியும், மாா்த்தாண்டம் ஜேசிஐ அமைப்பும் இணைந்து நடத்திய இப் பேரணிக்கு பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் முருகன் பேரணியை தொடங்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இப் பேரணி மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம், காந்தி மைதானம் வழியாக பள்ளியை வந்தடைந்தது. இதில் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் ஜேசிஐ அமைப்பின் தலைவா் மனோஜ், நிா்வாகி வினோத், போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெஸ்டின் மற்றும் ஆசிரியா், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT