நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா, வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில் சன்னதி தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.(படம்)
ரோட்டரி சங்கத் தலைவா் சங்கா் தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில், துணைச் செயலா் சுரேஷ், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் அறக்கட்டளை தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராமச்சந்திரன், உறுப்பினா் கோமகந்தலிங்கம், கோயில் நிா்வாகிகள் அருணா, சுரேஷ், தட்சிணாமூா்த்தி,பொறியாளா் பிரகாஷ், சுபாஷ் உள்ளிட்டோா் பலன்தரும் மரக்கன்றுகளை நட்டனா்.