கன்னியாகுமரி

தோவாளை பெரியகுளம் சீரமைப்பு பணிகள்:ஆட்சியா் ஆய்வு

தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்குளம் மூலம் 71.25 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலங்களில் அதிகநீா் வரும்போது, இக்குளத்திலுள்ள உபரிநீா் அங்குள்ள தெற்கு மலை ஓடை, மறுகால் ஓடை வழியாக பழையாற்றிற்கு செல்கிறது.

இந்தக் குளத்தின் மதகுகள், மறுகால் ஓடைகளை சீரமைக்க ரூ. 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்வள ஆதார அமைப்பு) வசந்தி, உதவி செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், உதவிப் பொறியாளா் வின்ஸ்டன் லாரன்ஸ் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT