முகப்பு
கன்னியாகுமரி

மது விற்பனையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தென்தாமரைகுளம் அருகே மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்தாமரைகுளம் அருகே மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்தாமரைகுளத்தை அடுத்த புன்னையடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்து வந்தனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், புன்னையடி ரேஷன் கடை முன் பொதுமக்கள் திரண்டு வந்து, கருப்புக் கொடி ஏந்தி இதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →