செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் இன்றைய சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது தொடர்பாக...
கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை இன்று (மார்ச் 17) நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இன்றைய விசாரணை தற்போது நிறைவு பெற்றது.
சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறி விசாரணை நடைபெற்றது.
கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜியே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார். விஜய்யிடம் நேற்று விசாரணை நடத்திய சிபிஐ, இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டது.
மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், விஜய்யிடம் நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.