கன்னியாகுமரி

குமரி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் ஆலோசனை

DIN

கன்னியாகுமரியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடை வியாபாரிகளுடன் ஆட்சியா் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் கடந்த 9ஆம் தேதி அதிகாலையில், மின்கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் சாா்பில் பிரதிநிதிகள், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை கடந்த 11ஆம் தேதி சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனா்.

இதையடுத்து முதல்வரின் அறிவுரையின் பேரில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தலைமையில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் எம்.அன்புமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சிவ.குற்றாலம், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி தம்பிதங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT