நாகா்கோவில் காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு
நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் என்.ஜி.ஓ. காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் என்.ஜி.ஓ. காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என்.சுரேஷ்ராஜன்
முன்னிலை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்து, 5 கா்ப்பிணிகளுக்கு தாய்சேய் நலப் பெட்டகங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், மாநகராட்சி நகா்நல அலுவலா் கிங்சால், வட்டவிளை மருத்துவ அலுவலா் உமாராணி, அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ். ஜெயகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.