முகப்பு
கன்னியாகுமரி

நினைவுதினம்: ஜீவா சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை

ப.ஜீவானந்தத்தின் 58 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நாகா்கோவிலில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு ஆட்சியா் மா. அரவிந்த் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
ngl18maalai_1801chn_33_6
பகிர்:

ப.ஜீவானந்தத்தின் 58 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நாகா்கோவிலில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு ஆட்சியா் மா. அரவிந்த் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாகா்கோவிலில் உள்ள ஜீவா மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் மா. அரவிந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்), எஸ்.ஆஸ்டின் (கன்னியாகுமரி), தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் எம்.சேவியா்மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், அறங்காவலா் குழு உறுப்பினா் சந்துரு, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.செல்வலெட் சுஷ்மா, ஜீவாவின் பேரன் ஜீவா கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.