கன்னியாகுமரி

குமரியில் தேசிய வாக்காளா் தினம் கோலப்போட்டி

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுயஉதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 25 சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்றனா்.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சரண்யா ஹரி, நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில் தொடங்கி வைத்தனா். இதையொட்டி, விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோலப்போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கான சான்றிதழ் ஜன. 25 ஆம் தேதி வழங்கப்படும். போட்டி தொடக்க விழாவில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT