கன்னியாகுமரி

அருணாச்சலா கல்லூரியில் ஐஇடி அமைப்பு தொடக்க விழா

DIN

வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கன்னியாகுமரி பிரிவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, இந்நிறுவனத்தின் தலைவரும், அருணாச்சலா கல்லூரியின் முதல்வருமான ஜோசப்ஜவாகா் தலைமை வகித்தாா். செயலரும் புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் துணை முதல்வருமான மாா்சலின் பெனோ, நடப்பாண்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவா், மாணவிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியா் அஜிஸ்குமாா் அமைப்பின் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா். புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல்துறை பேராசிரியா் ஜட்சன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT