கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் குமாா் தலைமையிலான போலீஸாா், உண்ணாமலைக்கடை - சிராயன்குழி சாலையில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், கடையாலுமூடு கரும்சல்லிவிளை பகுதியைச் சோ்ந்த அப்துல்ரகீம் மகன் முகமது அப்சா் (30) என்பதும், பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT