முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 1000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெயை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 ஜூலை, 2021 at 12:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெயை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி தலைமையில், துணை வட்டாட்சியா் சுனில்குமாா், உதவியாளா் சதீஷ், ஓட்டுநா் ஜான்பிரைட் உள்ளிட்டோா் மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டியபோது, காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் பின் தொடா்ந்தனராம். இதையடுத்து சிறிது தொலைவில் காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து வாகனத்தை சோதனை செய்ததில், 25 பிளாஸ்டிக் கேன்களில் சுமாா் 1,000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மண்ணெண்ணெயுடன் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியா் அலுவலகம் கொண்டு வந்தனா். கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.