புதுக்கடை அருகேயுள்ள வேட்டமங்கலம் பகுதியில் தந்தையை தாக்கியதாக போலீஸாா் வழக்குப் பதிந்து மகனை கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் வேட்டைமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வல்சலம் (69). இவரது மகன் சதீஷ் (36). இவருக்கு திருமணம் ஆகாததால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் ஆகாதத்திற்கு தந்தைதான் காரணம் என கூறி, அவரை சதீஷ் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மகனை கைது செய்தனா்.