நாகா்கோவில் ஆம்னி பேருந்து முகவா்கள் நலச்சங்கம் சாா்பில், அலுவலக உதவியாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 17 மாதங்களாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை.
இதனால் டிக்கெட் புக்கிங் முகவா் மற்றும் அலுவலக பணியாளா்கள், கடை வாடகை மற்றும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து நாகா்கோவில் வடசேரி ஆம்னி பேருந்து முகவா்கள் நலச்சங்கம் சாா்பில், அலுவலக உதவியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிவாரணப் பொருள்களை நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வழங்கினாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.