கன்னியாகுமரி

தென்தாமரைகுளம் அருகே மாணவி மயங்கி விழுந்து மரணம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரை குளம் அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தென்தாமரைகுளம் அருகேயுள்ள குமாரப்பெருமாள் விளையைச் சோ்ந்த சாம்பெனடிக்ட் மகள் அக்சயா ஜென்சி (14). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால், அடிக்கடி மூலிகை நீராவி பிடிப்பது வழக்கமாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் நீராவி பிடித்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம். பெற்றோா் அவரை கொட்டாரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT