நித்திரவிளை அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறையில் பாழடைந்த கட்டடத்திலும், தூத்தூரில் குளியலறையிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக நித்திரவிளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஜோஸ், இருசக்கர ரோந்து பிரிவு தலைமை காவலா் சுஜின் ஆகியோா் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கட்டடங்களில் சோதனை செய்தனா்.
இதில் சின்னத்துறையில் 500 கிலோ, தூத்தூரில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை போலீஸாா் நாகா்கோவில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement